@font-face { font-family: TSCu_InaiMathi; font-style:normal; font-size: 10pt; font-weight:normal; src:url(http://mathy.kandasamy.net/fonts/TSCUINA1.eot); }

Saturday, October 09, 2004

எவளாவது ஒருத்...'தீ' கிடைப்பாளா? -5-

காத்திருப்புசார் பாடல்கள்



என் தமிழ் ஆசிரியர் மிகச் சுவாரசியமாகத் படிப்பிப்பார். இளைஞர்களுக்குப் பிடிக்கும்விதமாக இடையிடையே 'தமிழ்க் கவிஞர்களது' கவிதைகளையும் எடுத்துச் சுவைப் படச் சொல்லுவார். "...பொறுத்துப் பொறுத்தப் பார்த்தார் கவிஞன். ஒரு பெண்ணும் கிடைக்கேல்ல. காதலிக்க முடியேல்ல. கடைசியில பொறுமையிழந்துபோய்க் கேட்கிறான்: '...(எனக்கு) எவளாவது ஒருத்...தீ கிடைப்பாளா' எண்டு. அதாவது இதொரு குறியீட்டுக் கவிதைபோல... 'தீ' என்றது இளைஞன்ர மோகத்...தீயைக் காட்டுது"
இவர் சொல்லி முடிக்கையில் மாணவர் முகங்களில் சிரிப்பு. நவீன இலக்கியம், நவீன கவிஞர்கள் என அறிமுகமுடைய எனக்கு அன்று அந்தக் கவிஞரின் பெயரும் பதியவில்லை, அது 'கவிதை' என்கிற மனப்பதிவும் இல்லை; எனினும் அடிக்கடி அந்த வரிகள் மட்டும் வந்து சிறு புன்னகை தரும்.
எல்லோருக்கும் அப்படி ஒரு கணம் இருந்திற்று இருந்திற்று வாறதுதான். ஆண்களுக்கு எவளாவது ஒருத்..தீ என்றால், பெண்களுக்கும் 'எவனாவது ஒருத்..தன்' படிக்கும் காலத்தில், இளம் வயதில் (அதன் பின்புங்கூட தனிமையில் இருப்பவர்களுக்கு) துணை தேடலும் ஏக்கமும் வாழ்வில் ஒரு பகுதிகள்தானே...
அந்தவகையில் ஏராளம் பாடல்கள் அவரவர் மொழிகளில் எல்லோருக்குமே அவர்களது 'காலங்களுக்குரிய' பாடல்களாக இருக்கும். அதனாற்தானோ என்னமோ எந்தக் காலத்துப் பாடலென்றாலும் அதில் இலகுவாய் லயிக்கவும் உருகவும் எளிதாய் முடிகிறது. “இந்த மாளிகை வசந்தமாளிகை” அல்லது “ரோஜா மலரே! ராஜகுமாரி!" அல்லது "காலங்களில் அவள் வசந்தம்" போன்று அழகான வரிகளையுடைய இனிய குரலையுடைய பாடல்கள் அந்தக் கவிதையைப்போலவே மனதுக்குள் மகிழ்வைக் கொண்டு வரும்.
X எப்வ்.எம் இல் யாரும் தமக்குரிய பாடல்களை கெசற்றில் தள்ளி விடாதவரை... அந்தப் பாடல்கள் punk, rock n’ roll, reggae, r & b இதில் எதுவோ போய்க் கொண்டிருக்கும். அதிற் போகிற பாடல்கள் சந்தர்ப்பங்களுக்கேற்ப மனதை உருக்கிவிடும். பிறகு பார்த்தால் சாதாரணமானவையாய்க்கூடப் படும். நினைத்தபடியிருந்த வரிகள் வேறாக (இரண்டாவது மொழியல்லவா?), எனினும் உணர்வு கிட்டத்தட்ட ஒன்றாக இருக்கும். பாடியவர்களும் தொலைக்காட்சியில் பார்த்தபோது வெறுத்த, மனதுக்கு உவப்பளிக்காத பாடகர்களாய் இருப்பார்கள். எனினும் அந்தக் கணத்தில் பாடல் உருவாக்கிய மனஎழுச்சி மறுக்கவியலாது உட்தங்கியிருக்கும்.
ஒருமுறை வேலையால் வருகையில், மிகவும் அலுப்பான மனோநிலையில், கேட்ட ஒரு பாடல் ''Livin' my life in a slow hell/ Different girl every night at the hotel /I ain't seen the sun shine in 3 damn days” என்று ஆரம்பிக்கும். இதைத் தமிழ்ப்படுத்தினால்,
'எனது வாழ்க்கையை மெதுவான ஒரு நரகத்தில் வாழ்கிறேன்,
ஒவ்வொருநாளைக்கு ஒரு பெண் ஹோட்டல் அறைகளில் -
சூரியவெளிச்சத்தை மூன்று கொடிய நாட்களாய்க் காணவேயில்லை'
இப்படிச் செல்லும். விடியலை முழுவதும் தொழிற்சாலை வேலையில் கடத்திவிட்டு, வீடு வருகையிலும், எனது தமிழ் ஆசிரியரின் "எவளாவது ஓருத்.தீ கிடைப்பாளா" கணங்களிலும் இத்தகைய பாடல் பிடிப்பதொன்றும் பெரிய ஆச்சரியமல்லத்தான். அதிலும் 3 damn days என்ற வரியை அவன் பாடுகிற விதமும் ஏக்கமும் துயரமும் தருவதாய் இருக்கும். அந்த 3 சபிக்கப்பட்ட நாட்களே வாழ்நாள் பூரா பரவியுள்ளதோ என்றெல்லாம் மனம் கிளர்வுறும். அப்புறம் அந்த ஒலிபரப்பாளினி பாடியவர் Kid Rock ஆல்பம் Cocky எனவும் கொடுமையாய் இருந்தது அது. முன்பொருமுறை www.wsws.org இணையத் தளத்தில் Kid Rock பற்றி வாசித்ததில் மனதில் பதிந்த ஒரே ஒரு வர்ணணை: Untalented artist. அது தவிர, பத்திரிகைகள் ஊடாக, எனக்குத் தெரிந்த பிற விடயங்கள்: பிரபல நீலப் பட நடிகை பமீலா ஆன்டர்ஸனின் முன்னாள் காதலன். அது தனிப்பட்ட விடயம், ஆனால் போயும் போயும் ஒரு கேவலங்கெட்ட பாடகனினுடைய பாடலா மனதைக் கவரோணும்? அதுவும் ஒரு புத்திஜீவியாய் உருவாகிக்கொண்டிருக்கிற பெட்டைக்கு (அது நான்தான்!)? வீடு வந்து அந்தப் பாடல் வரிகளை யாஹீ வில் போட்டு தேடலோ தேடல். அவ் வரிகள் நினைவு வந்தாலும், கிட் றொக் கின் பெயர் தெரிந்தாலும், அவனுடைய எல்லா ஆல்பங்களும் வந்து தொலைக்க எதிலென்று குறிப்பிட்ட -அடிமுடி தெரியாப் பாடலைத்- தேடுவது? அந்தப் பாடலை அவனுடன் கூட ஒரு பெண்ணும் பாடியிருந்தாள். ஏனோ அந்தப் பெண் Dido என்று எனக்கு விளங்கியிருந்தது. டீடோ Eminem உடைய பாடல்களெல்லாம் பாடியுள்ளார், ஆகவே அவர்தான் என நினைத்தேன். Dido and Kid rock song என அடித்தேன்; அடித்தேன் விதவிதமாய், யாஹீ பதில் தருவதாய் இல்லை. பிறகுதான் பார்த்தேன் கிட் றொக் உடன் Sherly Crow என ஒரு லிங்க். அமத்தினால் கிட் றொக்கோடு கூடப் பாடியது எனக்குப் பிடித்தமான இன்னொரு பாடகி.
ஒரு வழியாகப் பாடல் வரிகளை அடைந்தேன்:



[Kid Rock]
Livin' my life in a slow hell 
Different girl every night at the hotel 
I ain't seen the sun shine in 3 damn days 
Been fuelin' up on cocaine and whisky 
Wish I had a good girl to miss me 
Lord I wonder if I'll ever change my ways 
I put your picture away 
Sat down and cried today
I can't look at you while I'm lyin' next to her 
I put your picture away, sat down and cried today
I can't look at you, while I'm lyin next to her





"எனது வாழ்க்கையை மெதுவான ஒரு நரகத்தில் வாழ்கிறேன்,

ஒவ்வொரு நாளைக்கு ஒரு பெண் ஹோட்டல் அறைகளில்

சூரியவெளிச்சத்தை மூன்று கொடிய நாட்களாய்க் காணவேயில்லை

கொகெயினிலும் விஸ்கியிலும் சுதிகூடியபடி...

எனக்காக ஒரு நல்ல பெண் இருந்தால் நல்லம் என்று எண்ணியபடி...

கடவுளே

என் பழக்கங்களை நான் மாற்றுவேனா

உன் படத்தை துாரே வைத்தேன்

உட்கார்ந்திருந்து அழுதேன் இன்று

அவளுக்கருகில் ப
டுத்திருக்கும்போது உன்முகத்தை என்னால் பார்க்க முடியாது

உன் படத்தை துாரே வைத்தேன்

உட்கார்ந்திருந்து அழுதேன் இன்று

அவளுக்கருகில் ப
டுத்திருக்கும்போது உன்முகத்தை என்னால் பார்க்க முடியாது..."




என்று கிட் றொக் பாடி முடிய,

சேர்ள் குறோ பாடுவா:




I called you last night in the hotel

Everyone knows but they wont tell

But their half hearted smiles tell me

Somethin' just ain't right

I been waitin' on you for a long time

Fuelin' up on heartaches and cheap wine

I ain't heard from you in 3 damn nights

I put your picture away

I wonder where you been

I can't look at you while I'm lyin' next to him

I put your picture away

I wonder where you been

I can't look at you while I'm lyin' next to him



"நேற்றிரவு உனக்கு அழைத்தேன் - உன் ஹோட்டல் அறைக்கு
எல்லோரும் அறிவார்கள் ஆனால் யாரும் சொல்லார்கள்
ஆனால் அவர்களது அரைமனப் புன்னகை எனக்கு எல்லாவற்றையும் சொல்கிறது
ஏதோ சரி இல்லை!
உனக்காக நான் நீண்ட நேரம் காத்திருக்கிறேன்
இதயவலிகளாலும் மலிந்த வைன்னாலும் சுதிகூடியபடி...
மூன்று கடும் நாட்களாக உன்னிடமிருந்து செய்தியில்லை
உன் படத்தை துரே வைத்தேன்
நீ எங்கிருக்கிறாய் என எண்ணினேன்
உன் முகத்தை என்னால் பார்க்க முடியாது அவனருகில் படுத்திருக்கையில்.."


கேட்கும்போது இருந்த தீவிரம் பிறகு குறைந்தாலும், அந்த இரண்டு குரல்களும் மாறி மாறி பாடியபோது எழுந்த உணர்வெழுச்சி குறைவில்லை. அதே சமயம், அதென்ன அவனது வரிகளில் மட்டும் “நல்ல பெண்” என்கிற வரி, அதன் உள்ளர்த்தம் என்றெல்லாம் எதிர்வினையாக அறிவுசார் கேள்விகள் எழவும் செய்யும்.

சமீபத்தில் நான் கேட்ட ஒரு பாடலும் அது தந்த அனுவமும்தான் இதை பகிரவே தூண்டியது. X-FM இல் கேட்ட பாடல்:


EVERY BREATH YOU TAKE

Every breath you take
Every move you make
Every bond you break
Every step you take
I'll be watching you

Every single day
Every word you say
Every game you play
Every night you stay
I'll be watching you

O can't you see
You belong to me
How my poor heart aches with every step you take

Every move you make
Every vow you break
Every smile you fake
Every claim you stake
I'll be watching you

Since you've gone I been lost without a trace
I dream at night I can only see your face
I look around but it's you I can't replace
I keep crying baby please

Every move you make
Every vow you break
Every smile you fake
Every claim you stake
I'll be watching you

(by: The Police)


இது யாஹீவில் தேடி எடுத்த வரிகள். வந்து அடித்துப் பார்த்தால் அது ஸ்ரிங் இனது என்றதும் சிறிது ஏமாற்றமாக இருந்தது. அது ஒரு புதுப்பாடலாக இருக்கும் என்று எதிர்பார்த்திருந்தேன்.
அந்தப் பாடல் ஒரு classic என்று போட்டிருந்தார்கள். உண்மையாகத்தான் இருக்கவேண்டும். இந்தப் பாடலிடை வருகிற வரிகள்-


O can't you see

You belong to me
How my poor heart aches with every step you take


ஓ... உனக்குத் தெரியவில்லையா
நீ எனக்கு ரியவள்
நீ எடுக்கும் ஒவ்வொரு அடியிலும் என் இதயம் நோகிறது


பாப்லோ நெருடாவின் கவிதையொன்று “நீ என்னை மறந்தால்” என்று... அதில் இப்படி ஒரு அனுபவம் வரும்: 'அன்புக்குரியவளே! சிறிது சிறிதாக, நீ என்னை மறக்கநேரின் நானும் உன்னை மறந்துபோயிருப்பேன் ஆனால் நீ என்னை தினமும் தினமும் நினைக்கிறாயெனில்...
நானும்... உனைவிட அதிகமாக, உன்னைவிடத் தீவிரமாக உன்னை நினைக்கிறேன்'
அதே அனுபவத்தை அந்த 'பொலிஸ்காரர்களின்' (The Police) ஆல்பத்தில் பெறக்கூடியதாக இருந்தது. ஸ்ரிங் தனியே பாடியதைவிட 1980 வரை The Police என்கிற ஒரு band ஆக இருந்தபோது பாடிய இப் பாடலில் இக் குறிப்பிட்ட வரிகள் உயிர்ப்பாக இருக்கிறது.


மற்றப்படி, அறிவுபூர்வமாகப் பார்த்தால் இந்தப் பாடலகள், இந்தக் கவிதைகள் எல்லாமே
ஓரு உறவில் இருந்து பிரிந்த பிற்பாடு அதைப் பாடல்களால் ,கவிதைகளால் கிளறுவானேன் ('நான் இன்னும் இருக்கிறேன்' என குரல் விடுவானேன்?) எனக் கேட்கத்தான் வைக்கிறது. பாப்லோ நெருடாவும் இன்ன பிற கவிஞர்களும் இந்தப் பாடகர்களும் இயல்பில் யதார்த்தத்தில் அதைத்தான் செய்த(வ)ார்கள். ஆனால் கவிதையிலோ (ஒருத்தியுடன்) மிகமிகக் காதல்வசப்பட்ட ஒருவராய் ஒரு பிம்பம் அவரை/அவர்களையிட்டு உருவாகிறது. நியத்தில் இந்தப் பாடல்கள், அவர்களுடன் சம்மந்தப்பட்ட, பெண்களை -தம் வாழ்க்கையில் தொடர்ந்து செல்ல முடியாதவாறு- மீண்டும் மீண்டும் அவர்களை நாடச் செய்திருக்கும்! எம்மைக் குறிப்பிட்ட அளவுக்குத்தான் இவை ஆதிக்கம் செய்கின்றன. அந்த குறிப்பிட்ட அளவில், வாழ்வில் ஒரு பங்காக, தெருவில், திரையில், இசை நிகழ்ச்சிகளில் பாப்லோ நெருடாவின் கவிதை தந்த அனுபவத்தை தரத் தயாராகின்றன.
0

4 Comments:

Blogger kirukan said...

உங்கள் எழுத்து நன்றாக உள்ளது. வாழ்த்துக்கள்.

ஒரு சிறிய கோரிக்கை.
நீங்கள் உங்கள் பதிவை பதிவு (compose)செய்யும் போது, justify Full என்ற button ai அழுத்துவீர்களானால் பாரா நன்றாக இருக்கும்.

Hope you get what i mean... I am not able to describe that in tamil.... When you compose your post, click that justfily Full.. So that each line will adjust the space available at the end of the line..

10/10/2004 08:57:00 a.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

hey thank u!
got it-
though i have some probs regards this blog, will get through it,
thanks for ur comment.

10/11/2004 05:02:00 p.m.  
Blogger சன்னாசி said...

அது ஷெரில் க்ரோ. Sheryl Crow என்பது Sherly Crow என்று தவறாகப் பதிவாகிவிட்டதென்று நினைக்கிறேன்.

10/19/2004 06:43:00 a.m.  
Blogger ஒரு பொடிச்சி said...

montresor,
yes U are right,
I will correct the spelling!

10/19/2004 07:32:00 p.m.  

Post a Comment

<< Home